என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா...

சொல்லாத துயரங்களில் சென்னை அழுவுதடா,
சூடான சென்னை என்ற பெயரும் மாறுதடா,
குடித் தண்ணீருக்கே அன்று குழாயடி சண்டையடா,
தண்ணீர் பிடிப்பதற்கே இன்று பாத்திரம் இல்லையடா,
நீரில் மிதந்தாலும் குடிக்க நல்ல தண்ணியில்லையடா,
குடிமக்கள் குதுகலிக்க சரக்கு தட்டுபாடில்லையடா
சூழும் தண்ணீரிலும் சுருட்டும் ஜென்மங்களடா,
சுற்றிக்கொஞ்சம் பாரடா நம்மக்கள் பாவமடா,
முடிந்த உதவிகள் செயலில் இறங்கி செய்திடுடா,
இடைஞ்சல் செய்யாமல், இயற்கையை வையாமல்,
இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா....


- கவிதை பூக்கள் பாலா
Like

No comments:

Post a Comment