என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, December 8, 2010

சுகமான இம்சை



















பேருந்திற்கு காத்திருப்பதும்
சுகமான இம்சை ஆனது ,
காத்திருப்பது உனக்காக என்பதால் !

உன் அன்பினாலே ! ........



















சிந்திக்கும் என் மனது
சிறைபடாத என் இதயம்
சிதையாத என் உணர்வு
மயங்காத என் விழிகள்
மண்டியிட்டு போனதடி
உன் அன்பினாலே ! ......... பாலா

பயணங்கள் முடிவதில்லை ...

















சிந்தித்தால்
உள்ளம் சிறக்கும்
சிரித்தால் சிந்தனை சீர்படும்
சிந்தனை சீர்பட்டால்
நேர்கொண்ட பார்வைவரும்
பார்வை தெளிவானால்
பயணங்கள் முடிவதில்லை ... - பாலா .

வயிற்று பசி ..........

















தினம் ஒரு (கள்ள) காதலனை தேடினேன்
என் உடல் பசியை தனிப்பதற்கல்ல ......
என் தொப்புள் கொடிகளின் ( குழந்தைகள் )
வயிற்று பசியை போக்க ..........

Monday, December 6, 2010

நீ தான் தந்தை ............


என் கவிதைகளுக்கு நான் தாய் என்றால்
நீ தான் தந்தை என் காதலியே !
உன்னால் தான் என் கவிதை பிறந்தது ....... - பாலா

யாருக்கும் தெரியாமல் .........


உன்பெயரையே வைத்துவிட்டேன்
காதலனே ! என் குழந்தைக்கு ...- நான்
உனை கொஞ்சவும் முடியும்
நெஞ்சினில் சுமக்கவும் முடியும்
யாருக்கும் தெரியாமல் ........ - பாலா

Sunday, December 5, 2010

உணர்விற்கு பொருள் தந்தவளே !

 VA - Sax For Lovers (3CD) 1994
உனை பார்த்தபோது அழகின் எல்லையரிந்தேன்
நீ பார்த்தபோது பார்வையின் வலிமையரிந்தேன்
நீ என்னை கடந்தபோது தென்றலின் இதம்முனர்ந்தேன்
நீ செதுக்கிய வார்த்தை சிற்பத்தில் தமிழின் இனிமை அறிந்தேன்
நீ என்னை கண்டித்தபோது கண்டிப்பத்தின் பொருள் உணர்ந்தேன்
நீ துன்பத்தில் கண்ணீர் வடித்தபோது அதன் கொடுமையரிந்தேன்
நீ என்னை காதலித்தபோது காதலின் புனிதமரிந்தேன்
நீ என்னில் முழுமையாய் கலந்தபோது
வாழ்க்கையில் முழுமையடைந்தேன் ........ - பாலா