என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 11, 2014

காதல் உயிரென இன்னும் தொடர்வது ...........

சந்தோஷ நிமிடம் நாம்
பேசிய முதல் வார்த்தை
கடின காலம் கண்டித்து
நீ நடத்திய மெளனயுத்தம்
நிறைவு நேரம் உன்துயர்
துடைத்து நீ என் நெஞ்சில்
புதைந்த அரவணைப்பு
இறுகிய நிமிடம்
துக்கம் தாளாது நீ சிந்திய கனம்
கரம் இருந்தும் துடைக்க துப்பில்லா
நான் துடித்தது
சினம்நிறைத்தது
சிந்தனை இருந்தும் தெரிந்தும்
வீம்பாய் சிறையில் சிக்கியது
பொறுமை புரையோடியது
கண்டும் காணாது
நீ நடத்திய நாடகம்
உண்மை என நம்பியது
வலிகள் நிறைத்தது
உன் நினைவில் நான்
இல்லாமல் போனது
உணர்ச்சி நிறைத்தது
நீ கொண்ட
காதல் உயிரென
இன்னும் தொடர்வது ...........
- கவிதை பூக்கள் பாலா

 

No comments:

Post a Comment