என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, November 26, 2014

இனி ஏது பிரிதலிங்கே.....:


காதலிக்கும், காதலனுக்கும் 
வார்த்தை போர் ,
யார் காதல் பெரிதென்று.


உனை அரை நிமிடமும் அகலேன்
உன் நினைவையும்விட்டு விலகேன்
புரியாதவன -காதலி,
உன் சந்தோஷம் பெரிதென விரும்பி
உனை சுற்றும் பக்தன்
நான் காதலன.


வார்த்தைகள் கனல் கொண்டு
காதல் பேர் ஆயுதமின்றி,
பார்த்துக்கொண்டிருந்த
வன ஈக்கள் பரிதாப்பட்டு
நாட்டமை செய்ய
முடிவெடுத்து.பிரதிட்டு
கூட்டியது விசாரணை சபை...


காதல் யாதென்று புரியா
நீங்கள் எப்படி காதலர்
முதற்கேள்வியே
மூச்சு திணறல்,
வாதங்கள் விதவிதமாய்
 அவர்கள் ஒருவர்மேல்
வைத்த காதல் உச்சம்
வைத்து வாதிட்டனர்,
வனம்முழுக்க ஆர்வம்
தொற்றியது நாட்டமை
தீர்ப்பு யாதாகும்
தனிவிவாதம் நடந்தேறியது.


தீர்ப்பு சொல்ல ஈக்கள்
நாட்டாமை(ராஜா) தொண்டை
கனைத்து ரீங்காரம்மிட்டார.


யாது தவறென்று புரியா
காதல் அன்பர்களே!,
உங்கள் காதல் பொய்யல்ல
விதமே பரிதாபம், ஏக்கத்தோடு
இளம் ஜோடிகள்........


காதல் யாதெனறிவாய் முதட்
காதல் எப்படி தனிமைப் பட்டது,
என்காதல்.. என் காதல்..  
சிவந்துமுகத்தோடு
கருணை விழியோடு தொடர்ந்தார்.


அன்பு பரிமாறிய பிறகே
 காதல் என அறிவீர்களா?
ஒன்றான இதயம் ,உணர்வு,
 ஏன் தனிமைப் பட்டது.
நம் காதல் என்ன ஏன்?
 அறியாய் ..........


நிசப்தம் நிலைத்து நின்றது,
தொடர்ந்து தீர்பெழுதிய
வார்த்தை தொடர்ச்சி..
நான் விடுத்தது நம் காதல்
 நாம் என்செய்வோம்
விவாதம் புரிதல் அன்பொழுக
அரவணைத்து நம் காதலாய்
பாருங்கள் உணருங்கள்.


நம் காதல்உயிர்த்தேவை
யாதென சினுகுங்கள்,
காதல் அறையில்
வஞ்சிக்கா சிறைப்பட்டு
வளமோடு வாழ்வீர்
காதல் ஈரிதயம்
ஓர் உணர்வு கொண்டது.
வார்த்தை முடித்து
கம்பீரம் மிடுக்கோடு
காதல் சுவையறிந்த
நல்லோனாய்
தேணீ நாட்டமை......


பலத்த கரவோசை
காதலோடு கவிபடித்து
இணைத்த உள்ளம்
கனிந்த காதல்
இனி ஏது பிரிதலிங்கே........

- கவிதை பூக்கள் பாலா

தொடர்ந்திடுமா வாழ்க்கை இனி......:



இதயம் துடிக்கின்றது,
உடலும் நடிக்கின்றது,
பொய்யுடல் இதுவென்றரியாமலே.


மருத்துவங்கள் ஓதுகின்றது,
தோழமைகள் கருணை
மழைபொழிகின்றது,
உறவுகள் உருகிப்போகிறது
பொய்யுடல் இதுவென்றரியாமல்..


நெடுவானம் நிர்மூலம்,
கதிரவனும் கருகிபோய்,
தென்றல் பேயிரச்சல் புயலாய்,
பூக்களும் கொடுவாளோடு,
கண்ணீர் கடலை மிஞ்சி,
வார்த்தைகள் அர்ஜுனன்
போர்க்கோல காண்டீபமாய்,
என் இதயம் சல்லடையாய்.

கனிவில்ல காதலாம் என்காதல்
உணர்வில்லா போனதாம் உயிர்க்காதல்,
காதல் அகராதியறியாமல் பிதற்றகள்,
முடிவு செய்துவிட்டு முகவரிதேடுதல்
பிரிவின் ஓர் இலக்கனமோ.

பறிக்கொடுத்த இதயத்தை
பிரபஞ்சத்தில் எங்கு தேடுவேன்
கருனையற்று நீ அறுத்தெறிந்த
காதலைக் கொன்று
நடைப்பிணமாய் அலையவிட்டு
ஆனந்தம்கொண்டாயடி.

வாழ்வுமுடியவில்லை நானறிவேன்,
வாழ்கையாதென்று தெரியேன்இனி
பயணம் முடியும் மட்டும் தொடருகின்றேன்.
துணையாய் அவள் நினைவுகள்
வழியாய் அவள் வசவுகள்....
தொடர்ந்திடுமா வாழ்க்கைஇனி......

- கவிதை பூக்கள் பாலா

Sunday, November 23, 2014

வார்த்தை வதம்

குதித்து ஆர்பரிக்கும்
குற்றாலமான மனதில்...
கல்லெறிந்த குலமாய்
மாறிய நிமிடம்..
உன் வார்த்தை வதம்
செய்த கொண்டிறிருகிறது.....

- கவிதை பூக்கள் பாலா

Saturday, November 22, 2014

நாளும் தினமும் :


விடிந்து விட்டதா
விழிகளின் சோகம்,

னித்துளி சுமக்க
இமைகளின் ஏக்கம்,


தயசூரியனை காண
பெற்றேரின் விருப்பம்,


டை பயின்று
உடலைக் குறைக்க
உடலின் ஆர்வம்,


டுத்து உருல
சோம்பலின் கபடம்,


ணியோசை எல்லாம்
இப்ப எதிரிகளின்
சங்கே முழங்கு........


கொஞ்ச நேரம்
சிணுகளின் ரகசியம் ...


புலம்பல்கள் எல்லாம்
ஒப்பாரிகளின் இசையாய்...


ப்படியே தொடங்குது


நாளும் தினமும்.....

- கவிதை பூக்கள் பாலா

பதறியழும் மனிதபிறவிகள்:



விவரமறிய உலகினுள் விரும்பியா
அன்னையின் கருவிலே அவதரித்தோம்,
சுமைகளிலலா குழந்தைப்பருவம்,
கூடி ஆடியப்பள்ளிப்பருவம்
குழைந்து நெளிந்த விடலைப்பருவம்,
காதல் பிடிக்கும் கபடப்(வாலிப)பருவம்,
ழுததை கொடுக்கும் கல்யாணப்பருவம்,
டமையாற்றும் காக்கும்(பெற்றோர்)பருவம்,
ளைத்தொதுங்கும் கடைசிப்பருவம்,
றுக்கமுடியா பருவ மாற்றங்கள்,
தறியழும் மனிதபிறவிகள்....
றந்தபினும் உலகம் தேடும்
அதிசியமான மனிதபிறவி..
ற்றுக்கொள்ளா வாழ்க்கை முறைகள்,
ன்னும் விடையறியா மனிதமுகங்கள் !!!!


-
கவிதை பூக்கள் பாலா

Friday, November 14, 2014

கடுகானாலும் வானம் கடந்து நிற்கும்

பிடித்தவரை இடறி நின்று
சாதித்து சிகரம் தொட்டாலும்
மனம் ஏனோ முழுமையடைவதில்லை ....
வெற்றி இனிப்பதில்லை
வெற்றிடமாய் காணும்
திசை எல்லாம் ...
சிறிய புன்முறுவல் ,
சின்னதாய் முகமலர்ச்சி
காணத்துடிக்கும் நெடிப்பொழுதும்
மரணத்தையே தோற்கடிக்கும்
வலி குடல் கவ்வும் ,
இதயம் சுடுகாடாய் எரியும்
கைதட்டல்கள்
கடைசி இசையாய்
காது நுகரும்
வாழ்த்துக்கள் ஒப்பாரியாய்
ஓநாயாய் ஓலமிடும்....

இதயம்தொட்டவர்  கரம் பற்றி
 வெற்றிக் கனி
பறிக்கும் நிமிடம்
கடுகானாலும் 
வானம்  கடந்து நிற்கும்
 இன்பம் இமயம் தொடும் ....

- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 13, 2014

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினத்தில அவங்களுக்கு போட்டியா ?
ஏன் ? இப்படி எல்லாம் அவங்கள சந்தோசமா பாத்துகங்க
நாளைக்கு அவங்க கூட நேரம் அதிகமா செலவிடுங்க .
குழந்தைகளோட குழந்தையா மன ரீதியா மாறிடுங்க..
நினைவுகளை  பகிந்துக்  கொள்ளுங்கள்........