என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

ஓ மை காட்

வீரத்தின் வடிவமே ! ,
அசகாயசூரனே !,
வீச்சருவாள் வீரனே !
துப்பாக்கியின் தோட்டவே !
கருணையின் மறுவுருவே !
அன்பின் பிறப்பிடமே !
எல்லாம் பேனருக்கு மட்டும்தானே !

உள்ளுக்குள்ள கதறல்,
சுற்றியும் எப்பவும் பதறல்,
எதுக்குடா இந்த வாழ்க்கை....
இரத்தத்தை ரசிப்பவனுக்கு
கருணை எங்குட்டிருக்குடா...
ஒரே காமெடியா இருக்குப்பா
பேனர்களை பார்க்கும் போது...
உடனே நம்ம சுனா பானா
நினைவுக்கு வரத நிறுத்தமுடியலிங்கோ..
ஓ மை காட்

காதல் நினைவுகள்

உன் இதயத்தில் உறங்கிப்போன நம் காதல் நினைவுகள்,
இன்றும் உறங்காமல் செய்கிறதடி என்னை....

காகம்

விரட்டிடும் காகம் வத்தல் காயிது,
கூவி அழைக்கும் காகம்,
விரதத்துல வயிறு காயிது...

மஞ்சள் பூசுது வானம்..

முடிந்து போகும் இரவும்,
மலரபோகும் விடியலும்,
சந்திக்கும்போது மயங்கிடுமோ
வெட்கி சிவந்து மஞ்சள் பூசுது வானம்..

வாழ்வின் சுவாரசியம்

எதிர்பார்க்கா நிகழ்வு எதிர்பாராமல் நடப்பதும்,
எதிர்பார்க்கும் தருணம் நிகழாமலும் போவதே ,
மனித வாழ்வின் சுவாரசியம்...

'' தந்தை ''

கருவாக்கி, கரம்பிடித்து வளம்வந்து,
உன் நிழலாகி, நிழல்தந்து,
தேய்ந்து, நீ தேயாது புன்னகைக்க,
தோள்சுமக்கும் சன்மானமற்ற
கடவுளடா '' தந்தை ''

இதுவே மனித வாழ்க்கை..

காற்றிலே கலந்துவிட்ட உயிரும் உடலும் ,
நேற்றுவரை மனிதனாக உருவகம்,
இன்று உடல்மட்டுமே பிணமென்ற பெயரோடு,
இனி நினைவுகளில் மட்டுமே ....
இதுவே மனித வாழ்க்கை.