என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

மேகமூட்டம்..

கறுப்பு திரையிட்டே நடிக்குது வானம்,
அழுகை(சோக) காட்சியாம்...

நிர்வாணமாய் அலைகிறது

நிர்வாணமாய் அலைகிறது எங்கள் வாழ்க்கை
நிவாரணங்களை தேடி...
- ஏழைகளின் மனக்குமுறல்

ஓடி ஒளிந்தான் சூரியன்

புன்னகைத்த நிலவுபெண்,
சூரியனின் காம பார்வையில்
நிலைக்குலைந்து அழுது வடிக்கிறாள் ,
ஆறுதல் சொல்ல யாருமில்லாமல்,
பயத்தில் ஓடி ஒளிந்தான் சூரியன்..

என்னன்பே !...

இதயத்தில் கீறிவிட்ட உன்சொல்லம்பு,
இரத்தத்தில் மிதக்குது நினைவலைகள்,
படக்கோட்டியாய் எனை மீட்டுடுவாயா
என்னன்பே !...

மழை...

மழையை வரவேற்று
மக்களுக்கு சேர்த்து வைக்காமல்
உப்புகரிக்க கடலில் சேர்த்திடும்
அரசின்(மக்களும்தான்) செயலற்ற நிலைக்கு
தூ தூ என்று காரி
துப்பிக்கொண்டிருக்கிறதோ மழை...

காதல் மலரும் மட்டும்...

கொட்டும் மழை கொடைஎன்பதா?
இல்லை கொடுமை என்பதா ?
வருணா நீ இன்னும் அழுவது சரியா ?
அவள் இல்லை வரமாட்டாள் அழாதே
எங்களையும் அழவைக்காதே !
அமைதிக்கொள் அடுத்த காதல்
மலரும் மட்டும்...

மக்களை நம்பாமல் இயற்கை...

இயற்கை,
தனக்குண்டான ஆபத்தை
தானாக சரிசெய்துக்கொண்டிருகின்றது,
மக்கள் செய்த
இயற்கை வன்கொடுமைகளை
அசுத்தங்கங்களை அகற்றி,
தன் இருப்பிடங்களை தேடி,
கொள்ளைக்கொண்டவர்களுக்கு அறிவுப்புகட்டி,
தன்னை அழியாமல் பார்த்துக்கொள்கிறது
மக்களை நம்பாமல் இயற்கை...


- கவிதை பூக்கள் பாலா