என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 24, 2015

குழந்தையின் அன்பு...

உடைத்திட நினைக்கும் உறவையும்
உயிரோட்டமாய் வைக்கும் சக்தியே

குழந்தையின் அன்பு...

ஞானம் பிறக்குது:



கனமான இதயம் கவிதை படிக்குது,
காரணம் அறியாது பரித்தவிக்குது,
காணாமல் எதையோ எதிர்பாக்குது,
விலகிடும் அன்பு உருகுலைக்குது,
அளவெடுத்த வார்த்தையில் அறுத்தெறிக்குது,
ஆடிய மனமிங்கு அழுது வடியுது,
மதியாத அன்பு இப்போ மதிப்பாகுது,
இழந்தபின்பே ஞானம் பிறக்குது....

- கவிதை பூக்கள் பாலா

அன்மென்றே உணர்ந்ததால்...

மலர்ந்ததும் பூக்களாகிறாள்,
பூத்ததும் மனம்(வாசம்) வீசுகின்றாள்,
வாசம் அன்மென்றே உணர்ந்ததால்...

நீண்ட இரவொன்று..

நிலவு காணாமல் ஏங்கும் மனதுடன்
நீண்ட இரவொன்று..
நினைவில் நீண்ட கனவொன்று
விடியும் வரை தொடர்கிறது..
விட்டுவிட்டு அவள் நினைவு
தூவானமாய் விடுவதாய் இல்லை..
விழிகளில் வினவிய காதல்கணைகள்
கபரிதம் செய்கிறது சுயநினைவுகளை..
சுட்டும் சுடாத வெப்ப சலனம்
வியவையாய் தேகத்தில் சிலிர்கிறது..
உயிருடன் உறவாடும் நேரங்களில்
வார்த்தைகள் மௌனமாகின்றது ..
உணர்வின் உந்துதல் காதல்
நம்பிக்கையின் நரம்பியல் செயல்பாடு..
கனவொன்றும் பொய்க்கவில்லை
விடியலுக்கு முன்அவள் கைபேசியில் முத்தங்கள்
அவள் நினைவுகளோடு உறங்கிபோனேன்....

- கவிதை பூக்கள் பாலா

ஒரு தோழியின் வரிகள்

ஒவ்வொரு இதயத்துடிப்பும்
உன் பிரிவின் வலியை
உணர்த்திக்கொண்டே இருக்கும்,
என் நெஞ்சத்தில் நம் காதல் வாழும் வரை..

''நம்பிக்கை பொய்த்ததால்''

நமக்கான தேடலில்
நடுவீதியில் இன்று...
''நம்பிக்கை பொய்த்ததால்''

காதலில் நாணுகிறது தன்னை மறந்தே !

நாம்மென்று சொல்வதில் நளினம் இருக்கிறது,
நம்மில் நம்பிக்கை பிறக்கிறது,
நெஞ்சோடு முகம் புதைத்து,
கரங்களால் தேச் சிறையிட்டே
காதலில் நாணுகிறது தன்னை மறந்தே.....
- கவிதை பூக்கள் பாலா