என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 11, 2014

இதழின் ஓரம் சிவந்த தடம் ......

தழின் ஓரம்
சிவந்த தடம்
காரணம் யாதென்று
வினவும் பார்வைகள்

கலங்கப் பார்வை
ஏளனப் பார்வை
ஏக்கப் பார்வை
காமப்பார்வை
கனிவுப்பார்வை
நக்கல் பார்வை
காரணம் ஒன்றேதான்

சினம் தடம் பதித்தது
பற்கள் உதவியது .........

- கவிதை பூக்கள் பாலா

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?....
--------------------------------------------------------
ஆயிரம் உறவுகள் உண்டிங்கே சுற்றி
அதில் அர்த்தம் பொதிந்தவை எத்தனை
என்றெண்ணி வடிக்கும் நோக்கில்
சிந்தனை சிக்கி
சிலந்தி கூட்டினுள் நானானேன்

ஒவ்வொன்றும் தனித்திசைகள்
தனக்கொன்று கோட்பாடுகள்
பார்வைகள் பலாயிரம்
பறக்கும் வலிமைகள் பலவாரு
விரும்பியனைத்தாள் விருப்பமாவோம்
வெட்டி எறிந்தால் விலகி நிற்போம்
உண்மையென்றால் உருகிப்போவோம்
உணர்வுயென்ரால் உயிராயிருப்போம்
உருகுலைத்தால் உதாசினமாக்குவோம்
நடிபென்றால் நாகரீகமாய் நகர்வோம்
நாடிப்பிடித்து, ரத்தசோதனை நடத்தி
இனமொழியளர்ந்து சுயநலம் சீர்தூக்கி
சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........
- கவிதை பூக்கள் பாலா

Monday, November 10, 2014

வலிகள் மட்டும் மாறாமல் தொடர்கின்றது..........

இதயம் ஏனோ கனக்கின்றது
காரணம் புரிந்தும் புரியாமல் இருக்கின்றது
விவரம் அறியா குழந்தை போல்
விரல்சூப்பி வில்லங்கம் புரிகிறது
உணர்வும் அறிவும் சண்டையிடுகின்றது
வலிகள்  மட்டும் மாறாமல் தொடர்கின்றது
- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 6, 2014

வயது அறுபது ஆனால் என்றும் நீ பதினாறு .....

குழந்தையாய்
திரையில் அறிமுகமாகி
சகலத்தையும் கற்றாய்
திரைத்துறையில்
சகலகலாவல்லவனானாய் .........
இமயம் முதல் குமரி வரை
திரைத்துறையில் நீந்தி
மகாநதியாய்  வலம்வந்தாய் ......
மாற்றங்கள் எதுவானாலும்
துணிந்து செயல்பட்டாய்
செவாலியர் சிவாஜியின்
செல்லக்குழந்தையானாய்
வேடங்கள் பல கண்டு
வீறுநடை போட்டு
ரசிகனை தொண்டனாய் மாற்றாமல்
தனிப்பாதை உனதாக்கி
இந்திய திரைவானில்
தன்னிகரில்லா இந்தியன்
திருமகன் நீயானாய்..
வயது அறுபது ஆனால்
என்றும் நீ பதினாறு
பிரபஞ்ச நட்சத்திரமாய் என்றும்
ஒளிர்வாய் நவரச உலகநாயகனே !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- கவிதை பூக்கள் பாலா

Wednesday, November 5, 2014

நிலவுக்குள் நீந்த முயன்றேன் :

நிலவுக்குள் நீந்த முயன்றேன்
பாட்டியின் அனுமதி எங்கே !
கடவுச்சீட்டு பரிசோதனை -
எனக்கு சோதனை.

கட்டணம் யாதென்றால்
இரண்டு வடை வாங்கினால்
இங்கிருந்தே போகலாமாம் ..

வழி தெரியாமல்
நான் முழிக்க
நரியாரின் துணையுந்டென்றனர்

குதுகுலத்தில்
மனம் குத்தாட்டம் போட
இடியாக இயம்பினர்
 நரியாரின் அடிப்பொடிகள்.

கடவுச்சீட்டிற்கு இரண்டு வடை
அவருக்கு நாலுவடையாம் ....
விக்கித்து வினவிய போது
வில்லனாக காக்கை வந்தது.

என்னடா இந்த சுப்பனுக்கு
வந்த வேதணை என்னுபோதே
பவ்வியமாய்
பல்லித்தார் காக்கையார்

காதும் காதும் வையுங்கள்
கால்மீது கால்போட்டு
கண்னுரங்கள் கனநேரத்தில்
கடவுச்  சீட்டு ........
ஆனால் வடை விருந்து
இடவேண்டுமாம் ....

மொத்தம் எத்தனை
வடைகளடா
வாங்குவேநென்றேன்
இதுதான் கடைசி வடை
வாங்கினால் இதேடு
இல்லை விட்டோடு
என்றனர் எக்கலதோடு .

 நிலவுக்கனவை
கழட்டி போடா
கடுகளவும் மனமில்லை .....
- கனவு தொடரும்
- கவிதை பூக்கள் பாலா  


வசந்தத்தின் விலாசம் .....
-------------------------------
வித்தைகள் பல பயின்றேன்
விசாலமான அறிவும் ஆய்தரிந்தேன்  
கனவுகள் கண்டு வந்தேன்
நேர்வழி மட்டுமே நலமென்றேன்
வாழ்க்கை வீதியில்
வசந்தத்தின் விலாசம்
தெரியாமல் தவித்தேன்.....
பணமெனும்
துடுப்பு சீட்டு இல்லாததால் ..........

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, November 4, 2014

இதயம் ....

இதயமும்
விழிகளும்
சண்டையிட்டது. 
நீ கபடம் செய்கிறாய் 
வலிகளை நான் சுமக்குறேன் ...
இதயம்  .....

- கவிதை பூக்கள் பாலா