என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, November 5, 2014

நிலவுக்குள் நீந்த முயன்றேன் :

நிலவுக்குள் நீந்த முயன்றேன்
பாட்டியின் அனுமதி எங்கே !
கடவுச்சீட்டு பரிசோதனை -
எனக்கு சோதனை.

கட்டணம் யாதென்றால்
இரண்டு வடை வாங்கினால்
இங்கிருந்தே போகலாமாம் ..

வழி தெரியாமல்
நான் முழிக்க
நரியாரின் துணையுந்டென்றனர்

குதுகுலத்தில்
மனம் குத்தாட்டம் போட
இடியாக இயம்பினர்
 நரியாரின் அடிப்பொடிகள்.

கடவுச்சீட்டிற்கு இரண்டு வடை
அவருக்கு நாலுவடையாம் ....
விக்கித்து வினவிய போது
வில்லனாக காக்கை வந்தது.

என்னடா இந்த சுப்பனுக்கு
வந்த வேதணை என்னுபோதே
பவ்வியமாய்
பல்லித்தார் காக்கையார்

காதும் காதும் வையுங்கள்
கால்மீது கால்போட்டு
கண்னுரங்கள் கனநேரத்தில்
கடவுச்  சீட்டு ........
ஆனால் வடை விருந்து
இடவேண்டுமாம் ....

மொத்தம் எத்தனை
வடைகளடா
வாங்குவேநென்றேன்
இதுதான் கடைசி வடை
வாங்கினால் இதேடு
இல்லை விட்டோடு
என்றனர் எக்கலதோடு .

 நிலவுக்கனவை
கழட்டி போடா
கடுகளவும் மனமில்லை .....
- கனவு தொடரும்
- கவிதை பூக்கள் பாலா  


வசந்தத்தின் விலாசம் .....
-------------------------------
வித்தைகள் பல பயின்றேன்
விசாலமான அறிவும் ஆய்தரிந்தேன்  
கனவுகள் கண்டு வந்தேன்
நேர்வழி மட்டுமே நலமென்றேன்
வாழ்க்கை வீதியில்
வசந்தத்தின் விலாசம்
தெரியாமல் தவித்தேன்.....
பணமெனும்
துடுப்பு சீட்டு இல்லாததால் ..........

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, November 4, 2014

இதயம் ....

இதயமும்
விழிகளும்
சண்டையிட்டது. 
நீ கபடம் செய்கிறாய் 
வலிகளை நான் சுமக்குறேன் ...
இதயம்  .....

- கவிதை பூக்கள் பாலா

பிரிவில்........

பிரிவும் ஒரு
தொடரோட்டம் தான் 
வாழ்க்கை ,
கருவறை முதல் பிரிவு
கல்லறை கடைசி துறவு
இடைக்காலம் இதனூடே ....
இதில் புரிதலிலும்
உறவிலும் , உணர்விலும்
நீட்டல், மழித்தல்
கடமை, கட்டாயம்
பலசாதி   பல்லிளிக்கும
பிரிவில்........

-கவிதை பூக்கள் பாலா

ஆகாயம் தடை சொல்லுமோ !

இடுதலில் தொடு நிமிடம்
சிகரம் தொட்ட குதுகுலம்
பசுமையின் நிறம் போல
வெறுமையின் முகமூடி அழகுதான்
பயணிப்பது சாத்தியமா ?
விழிகள் வர்ணிப்பது தடைபடுமோ !
அழகு ஆர்பரித்தால் ...
ஆகாயம் தடை சொல்லுமோ !

- கவிதை பூக்கள் பாலா

செல்லப் பொய்கள் விதிவிலக்கே!!!

இதழோடு தஞ்சமானேன்
இடைவிடாது முத்தமிட்டாள் 
தேன்ச்  சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம்  நீ என்றேன்
சுவையற்றுப்  போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள் 
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும் 
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா

Monday, November 3, 2014

உன்னை காணும் கனவுகளோடு ...

இரவின் தொடக்கம் நீ இருந்தாய்
உணவின் போதும் உடனிருந்தாய்
செல்ல சிணுகல் செய்துவிட்டு
என்னை ஏன்?
நடுஇரவில் தவிக்கவிட்டாய்...
விழிகள் அசதியில்
கதவடைத்த  பின்னாவது 
கனவில் என்னுடன் பின்னிகொள் ...
விடியலை நோக்கி ...
உன்னை காணும் கனவுகளோடு  ...
- கவிதை பூக்கள் பாலா