என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 4, 2014

பிரிவில்........

பிரிவும் ஒரு
தொடரோட்டம் தான் 
வாழ்க்கை ,
கருவறை முதல் பிரிவு
கல்லறை கடைசி துறவு
இடைக்காலம் இதனூடே ....
இதில் புரிதலிலும்
உறவிலும் , உணர்விலும்
நீட்டல், மழித்தல்
கடமை, கட்டாயம்
பலசாதி   பல்லிளிக்கும
பிரிவில்........

-கவிதை பூக்கள் பாலா

ஆகாயம் தடை சொல்லுமோ !

இடுதலில் தொடு நிமிடம்
சிகரம் தொட்ட குதுகுலம்
பசுமையின் நிறம் போல
வெறுமையின் முகமூடி அழகுதான்
பயணிப்பது சாத்தியமா ?
விழிகள் வர்ணிப்பது தடைபடுமோ !
அழகு ஆர்பரித்தால் ...
ஆகாயம் தடை சொல்லுமோ !

- கவிதை பூக்கள் பாலா

செல்லப் பொய்கள் விதிவிலக்கே!!!

இதழோடு தஞ்சமானேன்
இடைவிடாது முத்தமிட்டாள் 
தேன்ச்  சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம்  நீ என்றேன்
சுவையற்றுப்  போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள் 
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும் 
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா

Monday, November 3, 2014

உன்னை காணும் கனவுகளோடு ...

இரவின் தொடக்கம் நீ இருந்தாய்
உணவின் போதும் உடனிருந்தாய்
செல்ல சிணுகல் செய்துவிட்டு
என்னை ஏன்?
நடுஇரவில் தவிக்கவிட்டாய்...
விழிகள் அசதியில்
கதவடைத்த  பின்னாவது 
கனவில் என்னுடன் பின்னிகொள் ...
விடியலை நோக்கி ...
உன்னை காணும் கனவுகளோடு  ...
- கவிதை பூக்கள் பாலா

மீட்டா இரவின் மெல்லிசை

உன் விரல்கள் மீட்டிய நாதாங்களின் ஓசை
மீட்டா இரவின் மெல்லிசை(கனவு) தானோ !!!
- கவிதை பூக்கள் பாலா

காமலோகத்தின் வாசல் திறந்ததடி ........

உனது அங்கங்கள் கீரிய நொடிப்பொழுது
மின்சாரம் பாய்ந்து என் தேக முழுதும் ......
இச்சைகளின் மொத்த தொடுபுள்ளியாய்
காமலோகத்தின்  வாசல் தெரிந்ததடி  ........
- கவிதை பூக்கள் பாலா


Saturday, November 1, 2014

நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்

விடாத  மழையிலும்,
 என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
 வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின்  அன்பில் 
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம் 
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா