என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, November 3, 2014

மீட்டா இரவின் மெல்லிசை

உன் விரல்கள் மீட்டிய நாதாங்களின் ஓசை
மீட்டா இரவின் மெல்லிசை(கனவு) தானோ !!!
- கவிதை பூக்கள் பாலா

காமலோகத்தின் வாசல் திறந்ததடி ........

உனது அங்கங்கள் கீரிய நொடிப்பொழுது
மின்சாரம் பாய்ந்து என் தேக முழுதும் ......
இச்சைகளின் மொத்த தொடுபுள்ளியாய்
காமலோகத்தின்  வாசல் தெரிந்ததடி  ........
- கவிதை பூக்கள் பாலா


Saturday, November 1, 2014

நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்

விடாத  மழையிலும்,
 என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
 வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின்  அன்பில் 
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம் 
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா

Thursday, October 30, 2014

காதல் என்ன யாசித்து பெறுவதா ?

பெண்ணே!
நீ  சிரிப்பது என்னை பார்த்தா ?
இல்லை என் நிலையை பார்த்தா ?
- கவிதை பூக்கள் பாலா

 

பயணிப்பது கடினமே !.......

இதயமே நீ  இல்லாமல் போ ..
இரக்கமே நீ  தொலைந்து போ ..
சினமே நீ சிதைந்து போ
சுயமே என்னுள் சூம்பி போ
நினைவே நீ அற்றுப்போ ...
அன்பே நீ அனாதையாகிப்  போ
பொறுமையே நீ உச்சம் போ..

பண நாயகமான இவ்வுலகில்
இப்படியாய் மாறவில்லை எனில்
இனிபயணிப்பது கடினமே !.......

- கவிதை பூக்கள் பாலா

Wednesday, October 29, 2014

விடை தெரியாமல் வாழ்கிறோம் ...

விதி என்று இருக்கிறோம் ,
விடை தெரியாமல் வாழ்கிறோம் .........
சகதியில் வீழ்ந்த பின்னே
சதி என்று பிதற்றுகிறோம் ........
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, October 28, 2014

ஏனோ வாழவும் துடிக்கின்றது .....

இமைகள் மூட மறுகின்றது
இதயம் துடியா துடிக்கின்றது
எண்ணங்கள் தீயாய் எரிக்கின்றது
உடலில் பலவீன குடிக்கொள்கிறது
வேற்று சிந்தனை அற்றுப்போனது
வேதனை வேள்வி நடத்துக்கின்றது
வெறுமையாய் வாழ்க்கை தெரிகிறது
வேற்றுலகம் போய்விட துடிக்கின்றது
ஏனோ!
வாழ்க்கையை வாழவும்  விழைகின்றது ..
தன்னம்பிக்கையை துணையாய்  கொண்டு .......
- கவிதை பூக்கள் பாலா