என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, October 24, 2014

நினைவிலும் மறக்க முடியாமலே !

உணர்வுகள் இன்னும் இருக்குதடி,
இதயமும் நித்தம் துடிக்குதடி - அதில்
உயிராய் போனது  உன் காதலடி,
இன்று கனவாய் போன உன் காதலை
இருக்கும் இடமறியா தேடுதடி,
நினைவிலும் மறக்க முடியாமலே !

- கவிதை பூக்கள் பாலா




களைப்பே இல்லாமல் கொல்லுதடி !

கனமான உன் நினைவுகள் ,
கடக்க இயலா இரவுகள் ,
கடினமான உன் வார்த்தைகள்,
களைப்பே இல்லாமல் கொல்லுதடி !
-
கவிதை பூக்கள் பாலா

Monday, October 13, 2014

நினைவுகள் ! ( கனவுகள் )

 
சாட்சிகள் இல்லா  காட்சிகள் நிறைத்தது நினைவுகள் - அதில்
உண்மையும் பொய்மையும் கலந்திருப்பது கனவுகள்  .......

- கவிதை பூக்கள் பாலா

Sunday, October 12, 2014

புத்தகம் :


 ஞானம் பெற புரட்டப்  பட்ட என் பக்கங்கள் - இன்று
விழிகள் ஓய்விற்கு புரட்டப் படுகின்றதே ! -

- கவிதை பூக்கள் பாலா

Saturday, October 11, 2014

இரவு வணக்கங்கள் :


விழிகளின் ஏக்கம் காதலிக்காக மட்டும் அல்ல .......
தூக்கத்திற்கும் தான் ...........
- கவிதை பூக்கள் பாலா

Saturday, September 27, 2014

புனிதமுமாகிறேன்

உணர்ச்சிகளால் வந்த உணர்வா !
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை  யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன்  .............

- கவிதை பூக்கள் பாலா .....

Thursday, August 28, 2014

உன்னை சபிக்கிறேனடா

கல்நெஞ்சனும் கரைதிடுவன் என் நிலை அறிந்தால் !
அப்படிஎன்றால் ,  
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன்  காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ  எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
 - கவிதைபூக்கள் பாலா