என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, November 26, 2010

காதல்


காதல்
காதலை கடக்காதார் கனவிலும் இல்லை,
கனவிலாவது காதலை உலராதார்
இவ்வுலகினில் பிறந்ததில்லை.
ஊருக்கு தெரியாத காதலும் உண்டு,
உள்ளதை உருக்கிய காதலும் உண்டு,
உதட்டளவில் உளறிய காதலும் உண்டு,
உலகிற்கே வரலாறாய் நின்ற காதலும் உண்டு,
காதலின் ஆழம் என்று நினைத்து,
தன்னை மாயத்துக்கொண்டவரும் உண்டு.
தூய காதல் துணிந்து, காதலுக்கு
அழகாய் உயிர் கொடுத்தும் உண்டு.
உறவுகளின் மகிழ்ச்சியில்
உயிர் கொடுத்த காதல்,
காதலின் உச்சத்தில் காதலின்
பரிசை (வாரிசை) உலகிற்கு தந்தவரும் உண்டு - பாலா

No comments:

Post a Comment