என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, February 7, 2022

 உதடுகள் உறவாடினால், வார்த்தை பிறக்கின்றது .

கண்கள் உறவாடினால், புதுக்காதல் இறக்கைகட்டுது பாதங்கள் மிதிபட்டால், கண்டங்கள் கடுகாகிறது இதயங்கள் இணைத்து விட்டால் காதல், கவிதை படிக்குது ........ - கவிதைப்பூக்கள் பாலா

Monday, August 15, 2016

தீபந்தம்

தீண்டும் விரலில் (காம)தீபந்தம்
கொடுத்துவிட்டு குளிர்காயும் நேரத்தில்,
நீர்முத்துகள் உடலெங்கும் பூத்திடும் அதிசயம்,
கலவியல் தத்துவங்களோ !

Thursday, January 14, 2016

மாற்றதை நோக்கி எழுவோமடா..

மற தமிழா,
மண்டியிட்டது போதுமடா,
ஆட்சிகள் நம்பிக்கையிழந்தோம்,
நீதியை நம்புகிறோம் அனைத்திலும்
அங்கேயும் கைத்தட்டிவிட்டது..
அரசியல் விளையாட்டடா ?
பலியாவது உந்தன் இனமடா ..
கலாச்சாரம் போனதடா..
தமிழன் உயிர்கள்
மதிப்பிழந்து போனதடா..
வீரத்தமிழன் நாமடா
விடியல் நமக்கானதடா...
மயக்கம் போதுமடா
மாற்றதை நோக்கி எழுவோமடா..
மட்டமான மோசடி
அரசியல் வீனடா...
அரசியல் வேடதாரிகள்
அரங்கேற்றும் நாடகங்களடா..
மானமுள்ள தமிழனடா
தமிழா நம்மை நாம் இனி
காத்துகொள்வோம்மடா..

- கவிதை பூக்கள் பாலா

Friday, December 25, 2015

விருப்பம் இணையும் போது

காமத்தை மறந்தவரும் இல்லை,
காதலை மறுத்தவரும் இல்லை...
விரும்பும் விருப்பம் இணையும் போது...

வாழ்க்கை

குளுகுளு இரவு,
இதமான மனது,
தழுவிடும் கனவு,
அழைத்திடும் நினைவு,
அணைத்தது இமைகள்,
துவண்டது தேகம்,
உருண்டது நேரம்,
நிம்மதி உறக்கம்,
கனிந்தது காலை,
விரைந்திடும் மீண்டும்..
வாழ்க்கையை நோக்கி...
மனம் வலித்தாலும் வாழ்க்கை ஓட்டம் நிற்பதில்லை...
கூடவே ஓடவேண்டி இருக்கு.....