Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Saturday, September 24, 2011
Tuesday, September 6, 2011
யுத் பதிவர் சந்திப்பு ( என் அனுபவம் )
சென்னை, கே.கே.நகர் , முனுசாமி சாலையில் டிஸ்கவரி புக் சென்டர் முதல் மாடியில் 04.09 .2011 ஞாயிறு அன்று மாலை 6 .00 மணிக்கு நடைபெற்றது( அட நான் அப்பதான்பா போனேன் )..
நான் முதல் முறையா பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கேன் அப்பின்னு என்னாலையே நம்ப முடியல காரணம் பல வேலைகளுக்கு இடையில் கண்டிப்பாக போய்யே ஆகவேண்டும் என்ற முடிவோடு போய்
எல்லோரையும் அறிமுகம் செய்து கொள்ள ஒவ்வொருவராக சென்று அவர்களுக்கு தோன்றியதையும் அவர்களை பற்றியும் சொல்லி வந்தமர்ந்தனர் . அனைத்தையும் என்
பேச்சுகள் மிகவும் ஜாலியாகவும் , விமர்சனம் , நையாண்டி , நக்கல்ஸ்சோட நகர்ந்தது , பிரபல பதிவர்கள் ( சீனியர் ஜூனியர் என்ற வேறுபாடு எல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் ) பேசினார்கள் குறிப்பாக கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , சுரேகா , யுவகிருஷ்ணன் மற்றவர்கள் மன்னிக்கவும் பேசியவை அனைத்தும் ஞாபகம் இருக்கு ஆனால் அவர்கள் பெயர்கள் ஞாபகம் இல்லை . நன்றாகவும் , நம்பிக்கையாகவும், நம்பும்படியும் , சில யதார்த்தங்களையும் அலசி ஆராய்ந்தனர். இப்போதைய பதிவர்கள் நிலை என்ன எப்படி போய்கொண்டிருகின்றது என்றொல்லாம் பேசப்பட்டது , நான் பேசி இருந்தாலும் பலபேர் பேசியதை தொகுத்ததாக இருந்திருக்கும் காரணம் அவ்வளவு ஆதங்கம் மனதில் ஓடிகொண்டிருந்தது . பிலாசபி பிரபாகர் , சிவகுமாரும் பேசும் படி சொன்னார்கள் ( கொஞ்சம் வற்புறுத்தவும் செய்தார்கள் ) மறுத்து விட்டேன் காரணம் அறிமுகமே இல்லாத நான் எதையாவது சொல்லி வைக்க அது பதிவர்கள் மனம் நோக செய்யுமோ என்ற எண்ணம் தான் . ஆனால் பிறகுதான் தெரிந்தது அவர் பிரபலமாவது புதியவராவது அனைவரையும் கலாயித்து கொண்டிருந்தனர்.
கேபிள் சங்கர் அவர்களும் , ஜாக்கி சேகர் அவர்களும் உண்மையிலேயே ஜாலியான பதிவர்கள் தான் . இதில் கொஞ்சம் மாற்று கருத்தோடு சிவகுமார் மட்டும் பேசினார் ஆனால் கவனிக்கவேண்டிய கருத்தும் கூட , தனது சொந்த அனுபவத்தையும் சேர்த்தே சொன்னார். அவர் ஆதங்கம் புரிந்தது அதற்கும் பதிலும் அளிக்கப்பட்டது தாயகத்தை மறந்து விட்டு இலங்கையை பிரச்சணையை மட்டும் பெரிதாக எடுத்துகொள்வதை தான் ஆதங்கமாக வெளிபடுத்தினார்.
இடையே குடிக்க தண்ணீர் பாட்டல் தரப்பட்டது பிறகு சூடாக டீ கூட தந்தார்கள் பாவம் எந்த புள்ள செலவு செஞ்சுதோ தெரியல அவர்களுக்கு நன்றி ........ கடைசியாக அனைவரும் கலந்துரையாடல் போல் நடந்தது அதில் என் ஆதங்கத்தையும் அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை எந்த தனியார் பள்ளிகளும் வாங்குவதில்லை என்ற ஆதங்கமும் வெளிபடுத்தினேன் , பதிவர்கள் அதை அதிகம் கண்டுகொள்வதில்லை என்று பேசிகொண்டிருக்கும் போதே சபை வேக வேகமாக கலைந்தது நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதன் பிறகும் சென்னை உயர் நீதிமன்ற அட்வகேட் ( அட அவரும் பதிவர் தாங்க ) அவர்களுடனும் பேசினேன் கேபிள் சங்கர் , ஜாக்கி சேகர் , சிவகுமார் , இன்னும் சில நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் . மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது சென்னை பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டது . ...
பிலாசபி பிரபா கூட தான் போட்டோ எடுத்துகல ( அப்ப அவர் இல்லப்பா )
குறிப்பு : இரண்டு பெண் பதிவர்களும் கலந்து கொண்டனர் என்பது விசேஷம். அடுத்து யார்கிட்டையும் சொல்லிடாதீங்க பிலாசபி பிரபாகர் ஒரு சந்தேகத்தை என்னிடம் கேட்டார் நான் உங்களை எங்க வயது காரராக இருப்பீங்கன்னு நினைச்சேன்னு சொன்னாரு ( அட 25 வயசுக்குள்ள ) அட நானும் யுத் தாங்க அப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன் . என்ன பிலாசபி பிரபாகர் கிட்ட சொல்லிட்டு கிளம்ப முடியல ( அட அவர அங்க காணோம் ) சிவகுமார் மற்றும் சில பதிவர்கள் இடமும் அடுத்த பதிவர் சந்திப்புல சந்திக்கலாமுன்னு சொல்லிட்டு கிழ இறங்கினா புக் செண்டர்ல இன்ப அதிர்ச்சி கேபிள் சங்கர் சார் அன்பா பிஸ்கட்டு சாப்பிட கொடுத்தாரு. அவருக்கும் நன்றி , இப்படியாக என் முதல் பதிவர் சந்துப்பு முடிந்து வீட்டுக்கு கிளப்பினேன் ........................ மக்கா ... .
Subscribe to:
Posts (Atom)