
பிறந்தநாள் , பிறந்தநாள்,
என் தோழிக்கு பிறந்த நாள்
வின்னவளை வீழ்த்தி விட்டு
மண்ணுலகம் வந்த நாள் ,
தெவிட்டாத அன்போடு ,
மாண்புமிக்க பண்போடு ,
அழகிற்கு நீ எல்லைகோடோடு,
வீர் என்று சிரிப்போடு ,
முழு நிலவாய் புன்னகித்து
விரைந்து வந்த பெருநாள்.
தாயிக்கு நீ சேயாகி ,
இன்று ஒரு சேய்க்கு நீ தாயாகிலும்,
குழந்தையாய் பவனி வருபவள் .
தோழி நீ என்றும் ,
வற்றாத வளம்பெறுவாய்,
சிறப்பான வாழ்க்கை பெற்றாய் ,
அருமையான உறவுகள் பெற்றாய் ,
அழகான குழந்தை பெற்றாய் ,
நட்பான தோழமை பெற்றாய் ,
அளவிலா வாழ்நாள் பெற்று , உன்
அகம் மகிழ என்றும் வாழ
வாழ்த்தும் தோழியின் தோழன் .
கவிதை பூக்கள் பாலா