என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, January 25, 2011

நீ மண்ணோடு சென்றிடுவாய் .......



















சுதந்திர நாடுதான் நம்ம நாடு ,இதில்
நேர்மைக்கு சுதந்திரம் இல்லையேன்னு தோனுது .
குடியரசு தான் இன்று நம்மள ஆளுது ,
இதுல குடிமக்கள் தான் தினமும் வாடுது .
அன்னியன விரட்ட வேகமோ இருந்தது,
அவன் அன்னியம் ( அடுத்தவன் )என்பதாலா ,
என்று எண்ணி நொந்து போகுது .













உள்ளுக்குளே
இருந்து கிட்டு ,
குடியரசு என்ற பெயரோட,
நம்ம உசுரத்தான் வாங்குது.
நடப்பதெல்லாம் குடும்ப சண்டை,
பேச்செல்லாம் பெருசாதான் இருக்குது
செய்யும் செயல்கள்தான்
மானம் கெட்டு போகுது ,
பாசம், பாகம் சரி இல்லையே,
யாருக்கும் துணிவில்லையே என்று
மக்கள் மனம் போராடுது ,
தெருவில் நின்று போராட
வக்கற்று தான் போனது ,
போராட நினைத்தாலும்
ஏளனமும் செய்யுது .

உள்குத்தா நடப்பதால
உடம்பெல்லாம் வலிக்குது,
இருந்தாலும் நாம இந்தியன்னு வெளியில
பல்ல இளிக்கத்தான் தோனுது ,
இத ஒன்ன வச்சிக்கிட்டு
மக்களையும் ஏய்க்குது ,
இதற்கு பேரு குடியரசு(மக்களாட்சி)
அதுக்கொரு நாளும் வச்சி கொண்டாடுது .

கொள்ளையடிப்பவன் கூடாரமா !
குடியரசு என்றோ மாறி போச்சுது ,
குட்ட குட்ட குனியும் காலம்
மலையேறி போச்சுதுன்னா,
கொள்ளையடிப்பவனை எல்லாம்
கொல்லபுரம் கழுவசொல்லும் காலம்
வெகு தொலைவில்லை என
எச்சரிக்க தோனுது .

முழித்துக்கொள் குடியரசே !( மக்களாட்சி )
இல்லை நீ மண்ணோடு சென்றிடுவாய் .......
... வாழ்த்துக்களோடு கவிதை பூக்கள் பாலா ....
..

2 comments:

  1. உங்கள் ஆதங்கத்தை நன்றாக பதிவிட்டிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Philosophy Prabhakaran
    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete