என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, November 20, 2010

ஒரு வரி கவிதைகள் .......( அப்படின்னு நினசிக்கனும் )


முகம் பார்க்கும் கண்ணாடி
பார்ப்பவனை குளோங் செய்யும் மருத்துவர்

மிதிவண்டி
தன்னை மிதிப்பவனை சுமந்து செல்லும் அடிமை

நிழல்
வெளிசச்த்தில் பின்தொடர்ந்து இருளில் மறையும் உண்மை தொண்டன்

தீபந்தம் ( மெழுகுவர்த்தி )
தன்னை அழித்துக்கொண்டு எரித்தவனுக்கு வழிகாட்டும் தியாகி
காதல்
இதயத்தை துளைத்தெடுக்கும் துப்பாக்கி

வத்திக்குச்சி
உரசினாலே எரிந்துபோகும் கண்ணகி

மேளம்
அடிதாங்காமல் அழுதாலும் ,
அடுத்தவனை ஆனந்தபடுத்தும் நடிகன்

விதை
அடக்கம் செய்தபின்னும் உயிர் தெழும் ஏசு

சோளப்பொறி
தீயிட்டு வருப்பவனுக்கும் , அவன் போடும் இசைக்கு
ஆனந்தமாய் கூத்தாடி புன்னகைக்கும் நடனகாரி

2 comments:

  1. மிக்க நன்றி சார் உங்களுக்கு ,
    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்

    ReplyDelete